Posts

Showing posts from May, 2020

நீ பார்க்கும் பார்வைகள் 3

Image
அவள் சமாதானம் ஆகியிருந்தாள். அவள் மெல்லிய கரங்கள் அவன் தடித்த இடக்கையைச் சுற்றிப்பிடித்து இருந்தது. வலக்கைப் பெருவிரலால் அவன் கையைச் சுரண்டினாள். அவள் ஸ்பரிசங்களுக்கு அவனுக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை. "சொல்லு குஞ்சம்மா… இப்ப என்ன செய்யோனும் நான்?" அவள் கையைப் பற்றியபடி கேட்டான். "எனக்கு இப்ப வீட்ட போவேண்டாம்." "அப்ப..." "ஐஸ்க்ரீம்!" என்று சொல்லி அவனை குழைந்தபடி பார்த்தாள். "சரி சரி ஐஸ்க்ரீம் ஓகே… ஆனா இப்பிடிப் பாக்காத என்னை ப்ளீஸ்!" "சரி" என்று சொன்னவள் இன்னும் அதிக வாஞ்சையோடு அவனைப் பார்த்தாள். "குஞ்சம்மா, இப்பிடியே பார்த்துட்டு இருந்த என்டா வாங்கிட்டு வாற ஐஸ்க்ரீம் உடன உருகிடும்" சிரித்தான். "இந்தக் குளிருக்கும் காத்துக்கும் உருகாது, நீ போய் வாங்கிக் கொண்டு வா, நான் அங்கால பீச்ல இருக்கிறன்." அவள் வெகுளித்தனமான பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே கடைக்குள் போனான். எந்த யோசனையும் இன்றி அவனைத் தட்டி கடைக்கு அனுப்பிவிட்டு அகன்ற கடற்கரைச் சாலையை கடக்க துவங்கினாள். அவள் நினைவில் இருந்தவைகள் எல்லாம் ஒன்றுதான். ...

நீ பார்க்கும் பார்வைகள் 2

Image
அவனுடைய தேவதையின் மடியில் தஞ்சம் புகுந்திருந்தான். அவளும் அவளுடையவனின் தலைமுடியை வலது கையால் அழைந்தபடி இருந்தாள். அவள் இடது கை அவன் இருகரங்கள் இடையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அவன் அந்தக் கரத்தை குழந்தை விளையாட்டுப் பொம்மையைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளது கைதான் எவ்வளவு மென்மை. அவள் மௌனித்து அவன் செய்கைகளை ரசித்துக் கொண்டு இருந்தாள். அரவிந்தின் முகம் ஒருபோதும் பாவம் காட்டாது. ஆனால் அவன் கண்கள் அதிகம் காட்டும். பலராலும் அதை உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் தான்யா அவ்வாறு இல்லை. அவன் முகத்தசை அசைவுக்குக்கூட அர்த்தம் கூறுவாள். அவன் கண் சிரித்தால் அவள் மனம் ஆகாசத்தில் சிறகு விரித்துப் பறக்கும். அவன் கண்கள் சிறிது சோபை இழந்தாலும் கூட அவள் ஆன்மா எங்கோ ஆழங்களில் பாதாளத்தில் இருந்து கதறி அழும். இன்றைக்கு அவள் பார்த்துக் கொண்டிருந்த பார்வைக்கு அவன் கண்கள் ஜொலித்துக் கொண்டு இருந்தது. அவன் கைகள் இரண்டும் அவள் கையைப் பற்றிக்கொண்டு இருந்தது. அந்தப் பிடிமானம் அவன் உள்ளத்தின் ஆழமான உணர்வுகளை அவளுள் கடத்திக்கொண்டு இருந்தது. அவன் வாய் ஏதோ ஒரு பாடலை மெல்ல உச்சரித்துக் கொண்...

நீ பார்க்கும் பார்வைகள் 1

Image
அவனுடைய அழைபேசி ஆரவாரமாக ஒலித்தது. அணைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அதைத் தன் கைகளில் எடுத்தான். கண்களை கசக்கியபடி திரையை நோட்டம் விட்டான். அவன் தேடல் சிகப்பு நிற தொடுதிரை தான். பார்வை தெளிவாகும் முன் திரையில் அவன் பார்த்தது அவளுடைய பெயரை. தான்யா . அழகான பெயர். பெயரை கண் பார்த்து ஜீரணிப்பதற்குள் கைகள் சிகப்பு பொத்தானை தவிர்த்து பச்சைப் பொத்தானை தட்டிவிட்டது. அவன் பேசும் சூழ்நிலையில் இல்லை. முந்தைய இரவு அவனது அலுவலக வேலைகள் முடித்து படுக்க ரொம்பவும் நேரம் கடந்து இருந்தது. அதனாலேயே மணி பதினொன்றரை கடந்தும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். மதியம் இரண்டு அடிக்கும் வரை எழும்புவது இல்லையென்று இருந்தவனை அந்த அழைப்பு குழப்பிவிட்டது. நேரம் தாழ்த்திப்படுத்ததால் உண்டான அழுத்தம் மற்றும் பழு காரணமாக அவன் கண்கள் வீங்கிப்போய் இருந்தது. அவன் வாயை எச்சில் நிரப்பி இருந்தது. யோசிக்க நேரம் இருக்கவில்லை அவனுக்கு. அழைப்பை அணைத்துவிட்டு கழிவறையை நோக்கித் தாவி ஓடினான். முகம் கழுவித் திரும்புகையில் அவன் அறையின் அழைப்பு ஒலி அதன் பங்கிற்கு அலறியது. அழைபேசியை எடுக்கச் சென்றவன் அதை எடுத்து தான்யாவை மீண்ட...